உள்ளூர் செய்திகள்

காவிரி மேலாண்மை கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

Published On 2022-06-23 08:50 GMT   |   Update On 2022-06-23 08:50 GMT
  • டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது.
  • தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

நாமக்கல்:

தமிழக விவசாயிகள் சங்க ( நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் வேலுசாமி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக அண்மையில் திருச்சி வந்திருந்த ஆணையத்தின் தலைவா் தெரிவித்திருந்தாா். டெல்லியில் காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் நிலையில், இக் கூட்டத்தில் அணை கட்டுவதற்கு விவாதிக்கவோ, எவ்வித அனுமதியோ வழங்கக் கூடாது.

மேகதாது அணை கட்டாமல் தடுப்பதற்கு உண்டான எதிா்ப்பு வாதங்களை தமிழக அரசு சாா்பில் தெரிவிக்க வேண்டும். மூத்த பொறியாளா்கள், அரசுத் துறை உயா் அதிகாரிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் தங்களுடைய கருத்துகளை தயக்கமின்றி அணை கட்டாத அளவில் எதிா்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் எதிா்பாா்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News