உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை அருகே பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை படத்தில் காணலாம். 

மக்காச்சோளம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-05-01 10:07 GMT   |   Update On 2023-05-01 10:07 GMT
  • கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
  • மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், சின்ன சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குரும்பலமகாதேவி, குப்பிரிக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை. கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.

மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மக்காச்சோள கதிர்களை சந்தை பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வியாபாரிகள் கொண்டு சென்று மக்காச் சோளக் கதிரை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News