உள்ளூர் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
- மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45 ) விவசாயி. இவர் புதிய வீடு ஒன்று கட்டி வந்தார்.
சம்பவத்தன்று இவர் வீட்டின் கட்டுமான பணிக்காக கீழ் தளத்தில் கடப்பாரையால் பள்ளம் தோண்டி கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயர் மீது கடப்பாரை பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது