உள்ளூர் செய்திகள்

ரூ.40 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி மின்வாரிய ஊழியரிடம் ரூ.1.40 லட்சம் பறிப்பு

Published On 2023-10-11 14:25 IST   |   Update On 2023-10-11 14:25:00 IST
  • கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள் என கூறி ஏமாற்றி மோசடி
  • காரில் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

பீளமேடு,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த 51 வயதுடைய நபர்.

இவர் கோவையில் தங்கி மின்சார வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று, மின்வா ரிய ஊழியர், கோவை விமான நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு தனது நண்பர்கள் 2 பேருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது, மின்வாரிய ஊழியர், ஒரு விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு ெகாண்டார். அவர்களிடம் எனக்கு ரூ.40 லட்சம் கடன் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், உங்களுக்கு கடன் வேண்டும் என்றால், நீங்கள் முன்பணமாக, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். மேலும் அந்த பணத்தை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பெற்றுக்கொள்வோம். அதன்பின்னர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தப்படும் என்றனர்.

இதனை உண்மை என நம்பிய 3 பேரும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் கோவையில் உள்ள ஒரு வங்கி முன்பு காத்திருந்தனர். அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வந்தது.

அதில் இருந்து 4 பேர் திபுதிபுவென இறங்கினர். அவர்கள், நேராக லட்சுமணிடம் சென்று, நீங்கள் தானே போன் செய்து, லோன் வேண்டும் என கேட்டது என்றனர். அதற்கு அவரும் ஆமாம் என்று தெரிவிக்க, நாங்கள் கூறிய பணத்தை எடுத்து வந்தீர்களா என அந்த கும்பல் கேட்டனர்.

அதற்கு இவர்கள் தாங்கள் வைத்திருந்த பணப்பெட்டியை திறந்து காண்பித்தனர். அதில் பணம் இருப்பதை பார்த்த அந்த கும்பல், காரில் ஏறுங்கள், உங்களை வங்கி அழைத்து சென்று பணத்தை வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.

இதனை உண்மை என நம்பி 3 பேரும் அவர்களுடன் காரில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள்.

நீங்கள் இங்கு காத்திருங்கள். நாங்கள் சென்று வாங்கி வருகிறோம் என தெரிவித்தனர். அதற்கு இவர்கள் நாங்களும் வருகிறோம் என்றனர். இதனால் அந்த கும்பல் வலுக்கட்டாயமாக 3 பேரையும் காரில் இருந்து கீழே இறக்கி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இவர்களும் பணம் வந்துவிடும் என சில மணி நேரம் அங்கு காத்திருந்தனர். ஆனால் வரவே இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், லட்சுமணன் பீளமேடு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News