உள்ளூர் செய்திகள்

புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை சாப்பிட்ட செந்நாய்கள்

Published On 2022-06-17 13:49 IST   |   Update On 2022-06-17 13:49:00 IST
ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

Tags:    

Similar News