உள்ளூர் செய்திகள்

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நாளை கலெக்டருடன் ஆலோசனை

Published On 2023-06-04 13:49 IST   |   Update On 2023-06-04 13:49:00 IST
  • நூறாவது பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் ஓராண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது
  • நாளை கலெக்டருடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.

ஈரோடு, 

ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, கலைஞர் நூறாவது பிறந்தநாள் விழா தி.மு.க. சார்பிலும், அரசு சார்பிலும் ஓராண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஓராண்டிற்கு கட்சியின் சார்பில் மக்களுக்கு நலத்திட்ட வழங்கப்பட உள்ளது.

மருத்துவ முகாம்கள், விளையாட்டு, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து நாளை கலெக்டருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதையடுத்து தமிழக முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்துவோம்.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் தொடர்பாக மாறுபட்ட கருத்து மீண்டும் எழுந்து ள்ளது. அதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பிரச்சனைகள் மனு அளிக்க 16 மாவட்ட அலுவலகங்களிலும் நேற்று கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், பெறப்படும் மனுக்கள் மீது ஏற்கனவே அமைக்க ப்பட்டுள்ள கமிட்டியினர் ஆய்வு செய்து விரைவாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.   

Tags:    

Similar News