உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2023-02-06 07:12 GMT   |   Update On 2023-02-06 07:12 GMT
  • சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
  • மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

ஈரோடு

ஈரோடு தெற்கு போலீசார் சூரம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரம்பட்டி நேதாஜி வீதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 125 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல கொல்லம்பாளையம் ரவுண்டான அருகில் ஈரோடு தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்களில் வந்த நபரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், நஞ்சப்பகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்த சுதர்சன் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.2,200 மதிப்பிலான 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News