உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2023-10-05 15:33 IST   |   Update On 2023-10-05 15:33:00 IST
  • பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பு. புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் நான்காம் வார்டு கவுன்சிலர் துளசி மணி தலைமையில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தாகூர் வீதி 4-வது வார்டில் குடி தண்ணீர் கடந்த 6 நாட்களாக வருவ தில்லை. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடை ப்பதில்லை. அப்படியே ஆறு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தா லும் முன்பு போல் வேகமாக வருவதில்லை. மிகவும் குறைவாகவே வருகிறது.

நேரமும் குறைவாக வருகிறது. மேலும் இந்த குடி தண்ணீர் பிரச்சனையைப் பற்றி நகராட்சி அலுவல கத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கப்படவி ல்லை.

இதனால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் குடிநீர் குழா ய்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்து குடிதண்ணீர் சீராக வருவதற்கு நடவடி க்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலை ந்து சென்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News