உள்ளூர் செய்திகள்

கணவர் வேலைக்கு செல்லாததால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-02-24 15:23 IST   |   Update On 2023-02-24 15:23:00 IST
  • சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
  • வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே ஈங்கூர் ரோடு பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவருடைய மனைவி தேவி (வயது 30). இவர்களுக்கு 11 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

சதீசும் அவரது மனைவி தேவியும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஒப்பந்த அடிப்படையில் தையல் எந்திரங்கள் போட்டு கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில் சதீஷ் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தேவி தனது துப்பட்டாவால் வீட்டுக்குள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் தேவியின் தந்தை வேலுச்சாமி வீட்டுக்கு விரைந்து வந்தார்.

பின்னர் இது குறித்து வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News