உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக சரிந்தது

Published On 2023-09-08 10:58 GMT   |   Update On 2023-09-08 10:58 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
  • அணைக்கு வினாடி 354 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

ஈரோடு, செப். 8-

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.94 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 354 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கனஅடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.92 கனஅடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News