உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்தம் வாபஸ்

Published On 2023-09-14 09:57 GMT   |   Update On 2023-09-14 09:57 GMT
  • காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

ஈரோடு:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்க ப்படுவது போல தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும்,

100 நாள் திட்ட கணினி உதவியா ளர்களை பணி வரன்முறை செய்ய வே ண்டும், பதவி உயர்வு உள்ளி ட்ட 16 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்க ப்பட்டது.

இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவ ட்டத்தில் கலெக்டர் அலுவ லகம், 14 ஊராட்சி ஒன்றி யங்கள், ஊராட்சி அலுவலக ங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அரசு தரப்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க த்தின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசின் உறுதி மொழியை ஏற்று காலவரை யற்ற வேலை நிறுத்த போரா ட்டம் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.

இதை யடுத்து ஊரக வளர்ச்சிதுறை இயக்கு நரிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 16 அம்ச கோரிக்கைகள் தொடர்பான அரசாணைகள் ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

மேலும் ஊராட்சி செ யலாளர்கள் பணி விதிகள் தொடர்பான அரசாணை 2 நாட்களில் வெளியிடப்படும் என்று கூறியதையடுத்து மாநில செயற்குழு கூட்ட முடிவுகளின் படி காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று ஊரக வளர்ச்சிதுறையினர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

Tags:    

Similar News