உள்ளூர் செய்திகள்

கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Published On 2023-06-17 09:38 GMT   |   Update On 2023-06-17 09:38 GMT
  • கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
  • உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த வர் சாமிநாதன் (68). இவரது மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.

இவர்களது மகன் செல்வக்குமார் (43). இவரை பெருந்துறையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.

உடனடியாக மறுவாழ்வு மையத்தினர் பெற்றோர்க ளுக்கு தகவல் கூறி உடனடியாக வர சொல்லி உறவினர்கள் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News