உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2022-12-14 09:33 GMT   |   Update On 2022-12-14 09:33 GMT
  • ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் முகேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
  • இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பவானி:

பவானி அருகே உள்ள ஒலகடம் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (32). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் உள்ள ஒரு கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர் வேலை முடிந்து இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் ஒலகடம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.

அவர் மயிலம்பாடியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோடு சடையக் கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.

இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News