உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2023-08-18 09:50 GMT   |   Update On 2023-08-18 09:50 GMT
  • கஞ்சா விற்று கொண்டிருந்த இந்திரன் என்பவரை கைது செய்தார்.
  • கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

 ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு திருட்டுத்தனமாக கஞ்சா விற்று கொண்டிருந்த ஓடைப்பள்ளம் அண்ணாத்துரை மகன் இந்திரன் (வயது 23) என்பவரை கைது செய்தார்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஈரோடு மாவட்டம் திரு.வி.க. நகர் டாஸ்மாக் அருகே உள்ள பொது இடத்தில் சூரம்பட்டிவலசு சதீஷ்குமார் (48), அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (23) ஆகியோர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News