உள்ளூர் செய்திகள்

தொழிலாளி திடீர் சாவு

Published On 2022-08-14 09:31 GMT   |   Update On 2022-08-14 09:31 GMT
  • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
  • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News