உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளி திடீர் சாவு

Published On 2023-08-29 07:28 GMT   |   Update On 2023-08-29 07:28 GMT
  • டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
  • நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பியூர்:

நம்பியூர் அருகே ஓனாக்குட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் மேற்கு வங்க மாநிலம் மல்ட்டா மாவட்டம் ஹக்ரா ஹரி சந்திராபூர் பாபுக் பகுதியை சேர்ந்த ரபிஹஸ்தா (58) என்பவர் வேலை செய்து வந்தார். இவரும் தனது சகோதரர் மகன் ஹேமந்த் சரேணும் (25) தனியாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்த ன்று ரபிஹஸ்தா தனக்கு உடல்நிலை சரியில்லை நான் வேலைக்கு வரவில்லை என ஹேமந்த் சரேணிடம் கூறியுள்ளார்.

இதனை யடுத்து ஹேமந்த் சரண் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு இடை வேளை க்கு தங்கியிருக்கும் அறைக்கு வந்து பார்த்த பொழுது தனது சித்தப்பா எந்தவித பேச்சும், அசைவும் இல்லா மல் இருப்பது தெரிந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த அரசு டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதையடுத்து ஹேமந்த் சரேண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News