உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-06-03 08:55 GMT   |   Update On 2023-06-03 08:55 GMT
  • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.
  • பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

ஈரோடு, 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கான, 2 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

விருப்பம் உள்ளோர் வரும் 5-ந் தேதி முதல் 15-ந தேதி வரை, https://scert.tnschool.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரத்தை, இணைய தளத்திலும் அறியலாம். தமிழ், தெலுங்கு, உருதில் ஏதாவது ஒன்றை பயிற்சி மொழியாக கொள்ள விரும்புவோர், பிளஸ்-2 வில் மொழி பாடமாக படித்திருக்கவேண்டும். ஆங்கில வழியில் பயில விரும்புவோர், பிளஸ்-2 ஆங்கில வழியில் பயின்று இருக்க வேண்டும்.

பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவேற்றப்படுகிறது. பொதுப்பிரிவு, பிறர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது, கட்டண சலுகை உள்ளது. உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News