அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35.75 லட்சம் மோசடி
- அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35.75 லட்சம் மோசடி செய்துள்ளனர்
- பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ஈரோடு,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவரு க்கு குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியை சேர்ந்த ஒரு வர் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த நபர் கோமதியிடம் தனக்கு அரசு உயர் அதிகா ரிகள் நன்றாக தெரியும் என்றும் உங்களுக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அதற்கு ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய கோமதி அவரிடம் ரூ.8 லட்சம் கொடுத்து உள்ளார். இதேபோல் கோபி அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த கோபிநாத்திடம் அந்த நபர் மற்றும் அவருக்கு ஏஜெ ண்டாக செயல்பட்ட மேலும் 2 நபர்கள் அணுகி கோபிநாத்திடம் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.15ல ட்சம் வாங்கியுள்ளனர். இதைப்போல் மோகனாம்பாளிடம் இந்து சமய அறநிலைத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.75 லட்சமும், கணேச னிடம் டாஸ்மாக் டெண்டர் ஒப்பந்தம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் என 4 பேரிடம் மொத்தம் ரூ.33.75 லட்சம் வாங்கிக்கொண்டு அவர்க ளுக்கு கூறியவாறு அரசு வேலை வாங்கி தரவில்லை.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக அரசு வேலை வாங்கி தருவதாக அவர்க ளிடம் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பணம் கட்டி ஏமாந்த 4 பேரும் அவர்க ளிடம் வேலை வாங்கித் தரவில்லை என்றாலும் பரவாயில்லை பணத்தை திருப்பி தருமாறு கேட்டு ள்ளனர். அதற்கும் அவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து இன்று காலை கோமதி, கணேசன், மோகனாம்பாள், கோபிநாத் ஆகியோர் ஈரோடு கலெ க்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்ட த்தில் கலந்து கொண்டு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35.75 லட்சம் மோ சடி செய்தவர்கள் மீது சட்ட ப்படி நடவடிக்கை எடுத்து த ங்கள் பணத்தை மீட்டு தர வலி யுறுத்தி மனு அளித்தனர்.