உள்ளூர் செய்திகள்

அந்தியூர் பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரங்களை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் அகற்றும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

Published On 2023-05-28 07:06 GMT   |   Update On 2023-05-28 07:06 GMT
  • அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடை பெற்றது.
  • நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தியூர்:

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் அனுமதி யின்றி வைக்கப்ப ட்டுள்ள விளம்பர பல கைகள், பேன ர்கள் மற்றும் பிளாஸ்டிக் போர்டு களை அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், துப்பு ரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வை யாளர் ஈஸ்வரமூர்த்தி, செந்தில்கு மார் ஆகியோர் தூய்மை பணியாளர்களை கொண்டு அகற்றும் பணி நடை பெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புக்கள் 2023-2024-ன்படி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் இந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடை பெற்றது.

Tags:    

Similar News