உள்ளூர் செய்திகள்

புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-10-07 07:31 GMT   |   Update On 2022-10-07 07:31 GMT
  • தாளவாடி அருகே பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.
  • சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கணேச புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (54) விவசாயி. இவர் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். பின்னர் மாலை மாடுகளை வீட்டிக்கு அழைத்துவர சென்றார். அப்போது தனது பசு மாடு ஒன்று கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தது.

இதனையடுத்து இது குறித்து ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் கால் தடம் மற்றும் இறந்த பசுமாட்டை ஆய்வு செய்தனர். இதில் புலி தாக்கி பசு மாடு பலியானது தெரியவந்தது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News