உள்ளூர் செய்திகள்

விசைத்தறி உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-08-30 08:06 GMT   |   Update On 2023-08-30 08:06 GMT
  • சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
  • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செ ல்வி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6 மா தங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பண த்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிவா மதுவுக்கு அடிமையாகி தொழிலையும் சரி வர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்த ன்று காலை தங்களது உறவினர் ஒருவரை பார்க்க தமிழ் செல்வி வெளியே சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவி ட்டார்.

தொடர்ந்து சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோ து வீட்டின் உள் அறையில் சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியு டன் மீட்டு அந்தியூர் அரசு மரு த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News