உள்ளூர் செய்திகள்

பகலில் வெயில், இரவில் குளிரால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2022-12-19 09:46 GMT   |   Update On 2022-12-19 09:46 GMT
  • தாளவாடி பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது
  • கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் குளிர் வாட்டியது.

இந்த நிலையில் தாள வாடி பகுதியில் தற்போது மழை குைறந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதே போல் காலை 9 மணி வரை பனி மூட்டம் காண ப்படுகிறது. இதனால் விவசாய பணி கள் பாதிக்கபட்டுள்ளது.

தாளவாடி, தலமலை, ஆச னூர், கேர்மாளம், பன க்கள்ளி மற்றும் திம்பம் மலைப்பாதையிலும் பனி மூட்டம் காணப்பட்டது.

கடும் பனி மூட்டத்தால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டம் காரண மாக கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News