உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாமில் ஒரே நாளில் 586 பேருக்கு ஆணை

Published On 2023-07-25 09:36 GMT   |   Update On 2023-07-25 09:36 GMT
  • வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஈரோடு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஈரோடு நகரியம் கோட்டம், தெற்கு கோட்டம், பெருந்துறை கோட்டங்களில் வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாம்கள் செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, சாந்தி, வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், அந்தந்த மின் பிரிவு அலுவலகங்களில் நடந்தது.

இதில் பெயர் யமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் ஈரோடு தெற்கு மின் கோட்டத்தில் 200 பேருக்கும், நகரியம் மின் கோட்டத்தில் 236 பேருக்கும், பெருந்துறை கோட்டத்தில் 150 பேர் என 586 பேருக்கு ஒரே நாளில் பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் இறுதி வரை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் வீட்டு வரி ரசீது, கிரைய பத்திர நகல், பாக பிரிவினை பத்திர நகல், கணினி பட்டா,

அரசால் வழங்கப்பட்ட உரிமை சான்று, வாரிசு சான்று, பிணையுறுதி பத்திரம், பெயர் மாற்ற கட்டணம் ரூ.726-உடன் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.

Tags:    

Similar News