உள்ளூர் செய்திகள்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக்குழு ஆய்வு

Published On 2022-12-11 09:36 GMT   |   Update On 2022-12-11 09:36 GMT
  • விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
  • தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஈரோடு:

தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கரு விதைகளைக்கொண்டு கோவை தமிழ்நாடு வேளா ண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதைபெருக்கம், விவசாயிகளுக்கு சாகுபடி க்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணை களை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லிய மாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல் - கோ 51 ரகம் வல்லுநர் நிலை விதை ப்பண்ணை அமைக்க ப்பட்டு விதைப்பயிர் பூப்பரு வத்தில் உள்ளது.

இவ்விதைப்பண்ணையை பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம், விதைச்சான்று அலுவலர்கள் மாரிமுத்து, ராதா அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.

ஆய்வின் போது விதை ப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்த றிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.

மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News