உள்ளூர் செய்திகள்

குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் கிராமம் புகையிலை இல்லா கிராமமாக அறிவிப்பு

Published On 2023-08-25 13:21 IST   |   Update On 2023-08-25 13:21:00 IST
  • குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களும் புகையிலை இல்லா கிராம மாக அறிவிக்கப்பட்டது.
  • விழாவின் நினைவாக மரக்கன்றும் நடப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சா ரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் முதல் புகையிலை இல்லா கிராமங்களை உரு வாக்கிட அந்தந்த கிராம ங்களில் கூட்டங்கள் நடத்தி, மக்களிடமும், வியாபா ரிகளிடம் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று, புகையிலை இல்லா கிராமமாக அறிவிப்பு செய்து வருகின்றனர்.

அதன்படி, சத்தியமங்கலம் அரசூர் ஊராட்சியில் உள்ள குள்ளம்பாளையம், தாசநாய க்கனூர் கிராமத்தில் புகையி லை ஒழிப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி க்கு மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட சுகா தார நலக்கல்வியாளர் சிவகு மார் முன்னிலை வகித்தர்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இளங்கோ, அரசூர் ஊராட்சி தலைவர் மலர்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் 100 நாள் பணியாளர்களுக்கு புகையி லை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய்கள் குறித்தும், இளம் தலைமு றையினரின் சமூக சீரழிவு கள் குறித்தும், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது.

அதை த்தொடா்ந்து அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர். அதையடுத்து குள்ள ம்பாளையம், தாசநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களும் புகையிலை இல்லா கிராம மாக அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவின் நினை வாக குள்ளம்பா ளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் மரக்க ன்றும் நடப்பட்டது. இந்நிக ழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி, பி.டி .ஓ. பிரேம்குமார், கடத்தூர் சப்-இன்ஸ்பெ க்டர் அப்துல் வகாப், வட்டார சுகாதார மேற்பா ர்வை யாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News