உள்ளூர் செய்திகள்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-08-24 07:56 GMT   |   Update On 2023-08-24 07:56 GMT
  • அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
  • கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,250 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.84 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 250 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,350 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

Tags:    

Similar News