உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-08-18 10:02 GMT   |   Update On 2022-08-18 10:02 GMT
  • பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
  • இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (63). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர் பாச்சாமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயலட்சுமி வேலூருக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனிற்கு கணவர் பழனிசாமி போன் செய்து தான் குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டதாகவும், சாகப்போவதாகவும் கூறி போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி விரைவாக வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பழனிச்சாமி குடிபோதையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News