உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2023-05-27 09:21 GMT   |   Update On 2023-05-27 09:21 GMT
  • பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
  • 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

பெருந்துறை:

பெருந்துறை பேரூராட்சி யில் மொத்தம் 15 கவுன்சி லர்கள் உள்ளனர். இதில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதை நிறை வேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் கூறினார்.

கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர கோரியும், சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள விக்னேஸ் நகர், கவின் நகர், காந்தி நகர் பகுதியில் மொத்தம் 600 வீடுகள் உள்ள நிலையில் 600 வீடுகளின் கழிவு நீரானது தார் சாலைக்கு வருவ தாகவும், அதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க கூறியும், போதிய வாகன வசதி இல்லாததை சுட்டிகாட்டிய கவுன்சி லர்கள் தீர்மா னங்களை புறக்கணித்தனர்.

இதனையடுத்து தி.மு.க.வை சார்ந்த சுப்பிர மணியன், நந்தகோபால், சித்திக் அலி, புஸ்பா, பிரபாவதி, சரண்யா ஆகிய 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி கே.செல்வ ராஜ், கோமதி, புனிதமதி ஆகிய 4 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானவும் நிறைவே ற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News