உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

Published On 2023-10-31 09:53 GMT   |   Update On 2023-10-31 09:53 GMT
  • வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

சென்னிமலை:

தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னிமலை நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள், வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் சென்னிமலை அருகே இரட்டைபாலம் எல்.பி.பி. வாய்கால் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News