உள்ளூர் செய்திகள்

கறி வெட்டும் தொழிலாளி திடீர் சாவு

Published On 2022-07-13 08:18 GMT   |   Update On 2022-07-13 08:18 GMT
  • மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளி தூங்கும் போது எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் மேட்டுக்கடையில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணன் வேலை முடிந்து கடையில் தூங்கினார். கடை உமையாளர் கதவை தட்டினார்.

ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது சரவணன் எந்த அசைவும் இல்லாமல் இருந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News