உள்ளூர் செய்திகள்

தண்டனை விதிக்கப்பட்ட விவசாயி-கல்லூரி மாணவர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

Published On 2023-01-10 09:47 GMT   |   Update On 2023-01-10 09:47 GMT
  • சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  • இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே. ஜி. வலசு, பெருமாள்மலையை சேர்ந்தவர் கருப்பண்ணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவர்களின் மகள் தீபா.

கடந்த 2021 ஜூன் 26-ந் தேதி தனது தோட்டத்தில் மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் கூலி தொழிலாளி முருங்கத் தொழுவை சேர்ந்த குப்பம்மாள் ஆகியோருடன் கருப்பண்ணன் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது வந்த ஒரு வாலிபர் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதற்கு முன் மாத்திரை சாப்பிடுங்கள் என்று கூறி 4 பேருக்கும் மாத்திரை கொடுத்தார்.

மாத்திரை சாப்பிட்ட 4 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசார ணையில் கருப்பண்ணன் நிலத்தை குத்தகைக்கு எடுத்த சென்னி–மலை அம்மாபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவருக்கும் கருப்பண்ணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது தெரிய வந்தது.

கருப்பண்ணன், கல்யாண சுந்தரத்துக்கு ரூ.14 லட்சம் வரை பணம் கொடுத்து ள்ளார். அந்த பணத்தை கருப்பண்ணன் கல்யாண சுந்தரத்திடம் திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.

பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம் அடைந்த கல்யாண சுந்தரம் கருப்பண்ணனை கொலை செய்யும் நோக்கத்தில் தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விஷ மாத்திரைகளை சென்னிமலை எம்.பி.என். காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் போத்தீஸ் குமார்(20)என்பவர் மூலம் கொடுத்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து சென்னிமலை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி மாலதி நேற்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதில் முக்கிய குற்றவாளி யான விவசாயி கல்யாண சுந்தரத்திற்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இதேப்போல் மற்றொரு குற்றவாளியான போத்தீஸ்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் போத்தீஸ்குமார் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News