உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

Published On 2023-05-05 09:27 GMT   |   Update On 2023-05-05 09:27 GMT
  • 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அடுத்துள்ள ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீராஜராஜேஸ்வரி சொக்கநாச்சி அம்மன், மாரியம்மன், அக்கரை ப்பட்டி முனியப்பன் ஆகிய கோவில்களின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக அம்மாபேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சொக்கநாச்சி அம்மன் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் முன் அமைக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் பவானி, அந்தியூர், கோபி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 9-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News