உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாக உயர்வு

Published On 2022-08-04 09:56 GMT   |   Update On 2022-08-04 09:56 GMT
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது.
  • பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 2,327 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் காலி ங்கராயன் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

தற்போது பவானிசாகர் அணையின் அடி 101.50 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும். இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் குண்டேரி பள்ளம் அணை, பெரும்ப ள்ளம் அணை, வரட்டுபள்ளம் அணை யிலும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News