உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து 11-வது நாளாக 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

Published On 2022-08-15 09:34 GMT   |   Update On 2022-08-15 09:34 GMT
  • அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது.
  • இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது. இருப்பினும் தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 11-வது நாளாக 102 அடியில் நீடித்து வருகிறது.

இன்று காலை பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 800 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 5400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. உபரி நீர் குறைந்த அளவில் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பவானி கரையோர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News