உள்ளூர் செய்திகள்

கழிவு நீர் அகற்றும் 5 தனியார் வாகனங்களுக்கு அனுமதி

Published On 2023-05-30 15:26 IST   |   Update On 2023-05-30 15:26:00 IST
  • கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.
  • 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.

அதன்படி, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் மாநகராட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. தொடர்ந்து விண்ண ப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

எனவே இதுவரை விண்ணப்பிக்காத கழிவு நீர் அகற்றும் வாகன உரிமை யாளர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாகன உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

தவறும்பட்சத்தில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News