உள்ளூர் செய்திகள்

கணவருடன் மொபட்டில் சென்ற பெண் விபத்தில் பலி

Published On 2022-09-14 09:55 GMT   |   Update On 2022-09-14 09:55 GMT
  • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
  • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News