உள்ளூர் செய்திகள்
- ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே ஒட்டப்பாறை ஊராட்சி ஊத்துக்குளி ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் பிரவீன்குமார் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று பிரவீன்குமார் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் கொடிகம்பம் அருகே ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் பிரவீன்குமார் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.