உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் தகராறு செய்த ெதாழிலாளி கைது

Published On 2022-11-25 15:38 IST   |   Update On 2022-11-25 15:38:00 IST
  • அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
  • இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட எல்லீஸ்பேட்டை பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (46). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் செல்வி கடையில் இருந்தபோது அதே பகுதியில் உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்த அருள்தாஸ் (49). தொழிலாளி இவர். மதுபோதையில் கடைக்கு வந்து கடனாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளார். செல்வி சிகரெட் தர மறுத்துள்ளார்.

இதையடுத்து அருள்தாஸ் கடையினுள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கி கீழே போட்டு உடைத்தும், செல்வியை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறு செய்துள்ளார்.

இதனால் செல்வி அருகில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். அப்போதும் விடாமல் அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அருள்தாஸ் அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.

பின்னர் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News