உள்ளூர் செய்திகள்

வாய்க்காலில் குளிக்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து சாவு

Published On 2023-08-23 13:40 IST   |   Update On 2023-08-23 13:40:00 IST
  • நிலைதடுமாறி நடராஜ் தவறி வாய்க்காலில் விழுந்தார்.
  • பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பவானி:

பவானி கல்தொழி லாளர் முதல் வீதியை சேர்ந்தவர் நடராஜ் (65). கூலி தொழி லாளி. இவர் 2-வது மனைவி வளர்மதி மற்றும் முதல் மனைவியின் மகள் சந்தியா ஆகியோரு டன் வசித்து வந்தார்.

பவானி லட்சுமி நகர் கோண வாய்க்கால் பகுதி யில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் நடராஜ் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் துணி துவைத்து குளித்து வருவது வழக்கம்.

இந்த நிைலயில் சம்ப வத்தன்று அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் கோண வாய்க்கால் பகுதி யில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் துணி துவை த்து கொண்டு இருந்த னர். இதை தொடர்ந்து நடராஜ் படிக்கட்டில் நின்று கொண்டு குளித்து கொண்டிருந்தார்.

அப்போது நிலைதடுமாறி நடராஜ் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு நடராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பவானி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக நடராஜன் உடல் கொண்டு செல்லப்பட்டது.

சித்தோடு போலீசார் வழ க்கு பதிவு செய்து விசா ர ணை மேற்கொண்டு வருகி றார்கள்.

Tags:    

Similar News