உள்ளூர் செய்திகள்

கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

Published On 2022-11-03 15:06 IST   |   Update On 2022-11-03 15:06:00 IST
  • பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
  • சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பெருந்துறை:

பெருந்துறை சந்தை பகுதியில் சாந்தா (57) என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது? என்ற விவரம் தெரியாததால் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மேலும் பெருந்துறை சப்-டிவிஷன் குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும், பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை யிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சந்தை பகுதியில் உள்ள ஏராளமானவரிடம் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News