உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2022-11-29 09:37 GMT   |   Update On 2022-11-29 09:37 GMT
  • சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
  • போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.

விசாரித்ததில் நெரிஞ்சிப்பேட்டை படகு துறை வீதியை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ராக்கி (24) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News