உள்ளூர் செய்திகள்

10 ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தர சான்றுக்கு தகுதி

Published On 2023-04-03 08:01 GMT   |   Update On 2023-04-03 08:01 GMT
  • குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.
  • ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம்,

ஈரோடு, 

ஈரோடு மாநகரில் 10 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளன. தேசிய தர உறுதி குழுவை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனை சுகாதாரம், மருந்துகளின் இருப்பு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, மருத்துவர்கள் செவிலி யர்கள் வருகை. நோயாளிகளுக்கு அடிப்படை வசதி, மகப்பேறு சிகிச்சைமுறை, குழந்தைகளின் நலன், ஆய்வக பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினர்.

மத்திய அரசின் சுகாதார துறை சார்பில் சமீபத்தில் தேசிய தரச்சான்று பெற்ற நகர்ப்புற, கிராமப்புற சுகாதார நிலையங்களின் பட்டியல் வெளியி டப்பட்டது.

இதில் ஈரோடு மாநகராட்சியில் அகத்தியர் வீதி, நேதாஜி சாலை, சூரியம்பாளையம், வீரப்பன் சத்திரம், பெரிய சேமூர் 5 நகர்ப்புற சுகாதார நிலைய மும், மாவட்டத்தில் கோபி, பவானி, ஜம்பை, குத்தி யாலத்தூர், சித்தோடு ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலைய மும் தேசிய தரச் சான்றி தழுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளன. 

Tags:    

Similar News