ஆலங்குளத்தில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
- சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டத்திற்கு நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார்.
- முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு,ஆலடி சங்கரையா ஆகியோர் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார பொறுப்பாளர் ரூபன் தேவதாஸ், இளைஞரணித் தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா ஆகியோர் கலந்துகொண்டு, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை பின்பற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் செல்லையா கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் டி.எஸ்.பி. ஜெயராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் வேல்குமார் ராமசாமி, மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல், யேசுதாசன், ஜோசப், மாடக்கண்ணு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் பிரகாஷ், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.