உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2023-06-18 09:43 GMT   |   Update On 2023-06-18 09:43 GMT
  • நீர், நிலம், காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
  • நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திரி பப்ளிக் பள்ளி சார்பில், மாணவ-மாணவிகள் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

கல்வி அறக்கட்டளை நிறுவனர் கியாந்சந்த் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார், மகேஸ்வரி, சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் நீர்,நிலம்,காற்று மாசு படுவது குறித்து பொது மக்க ளிடையே விழிப்பு ணர்வை நாடகம் மூலம் நடத்தினர்.

மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்

Tags:    

Similar News