உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்த என்ஜினியரிங் மாணவர் சாவு

Published On 2022-09-17 07:46 GMT   |   Update On 2022-09-17 07:46 GMT
  • சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்து பலியானார்.
  • இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் சீனிவா சன். இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 20). இவர் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 6-ம் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரம்மி விளையாடினார்.இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.வங்கி கணக்கில் பணம் இல்லாத கண்டு அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். அதில் மணமடைந்த மாணவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தினார்.

மேல் சிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News