கிருஷ்ணகிரியில் மின் ஊழியர் போராட்டம்
- மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில்போராட்டம் நடந்தது.
- கோரிக்கைளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி மின்சார வாரியத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நேற்று நடந்தது. ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலி வழங்கிட வேண்டும், மின் துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும். 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டினை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி திட்ட தலைவர் துரை, துணைத் தலைவர் சதீஷ்குமார், திட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், லோகராஜ், ராஜாதேசிங்கு ஆகியோர் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் சாமுடி, சிவசங்கரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.