உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே முதியவர் மாயம்

Published On 2023-07-17 15:08 IST   |   Update On 2023-07-17 15:08:00 IST
  • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
  • இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் தேவராஜை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டபள்ளி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65).

இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் தேவராஜை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மகன் ரவி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தேவராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News