உள்ளூர் செய்திகள்

காரைக்கால் திருநள்ளாறில் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

Published On 2023-03-06 15:03 IST   |   Update On 2023-03-06 15:03:00 IST
  • தமிழரசன் (வயது 63).தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார் தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது,
  • தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலம்பாள் நகரைச்சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.  தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தற்போது உடல்நிலை சரியிலாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியா ளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உள்ளது.

இந்நிலையில், அனிதா கடைக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறினார்.விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனிதா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News