உள்ளூர் செய்திகள்

நிம்மேலி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதையும், மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்திருப்பதையும் காணலாம்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் முளைத்து சேதம்

Published On 2022-08-28 15:19 IST   |   Update On 2022-08-28 15:19:00 IST
  • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் இரவு பகலாக நெல் மூட்டையுடன் இருந்து வருகின்றன.
  • இந்நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

சீர்காழி அருகே நிம்மேலி சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 2000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்த சுமார் 3000நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்துள்ளனர்

ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் இரவு பகலாக நெல் முட்டையுடன் இருந்து வருகின்றன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து தற்போது மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளன பல்வேறு சிரமங்களுக்கு இடையே விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து பல நாட்கள் காத்திருந்த நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிய காலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து இருந்தால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் முளைத்திருக்காது விவசாயிகளுக்கு இழப்பும் ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக விவசாயிகள் நலம் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து வந்த நெல்முட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News