உள்ளூர் செய்திகள்

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலையில் பரபரப்பு தகவல்

Published On 2023-02-12 08:41 GMT   |   Update On 2023-02-12 08:41 GMT
  • கடந்த 10-ந் ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
  • இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவுரி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகி பிரணவ், ரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 10-ந்ேததி குருமூர்த்தி வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார், குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குருமூர்த்தி எப்படி இறந்தார்? என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் புதிதாக வீடு கட்டி இருப்பதும் அதற்காக சில நபர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதை கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலில் தனது மனைவியிடம் புலம்பி வந்தார். இதனால் சம்பவத்தன்று குருமூர்த்தி மது போதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிக்கொண்டு நேராக ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடினர்.

மேலும் வீராணம் ஏரியில்

தீயணைப்பு வீரர்கள், அப்ப குதி பொதுமக்கள் இறங்கி தேடினர். அப்போது மோட்டர்சைக்கிள் ஆழமான

பகுதியில் கிடந்தது. இதை

யடுத்து அந்த மோட்டார்சை க்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News